கஞ்சா போதையில் 80 வயது மூதாட்டியை கற்பழித்த வாலிபர் கைது!!
திருவனந்தபுரம் அருகே உள்ள களக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் நவ்சாத் (வயது 29). இவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றிவந்தார்.
மேலும் கஞ்சா பழக்கமும் அவருக்கு இருந்ததால் பல நேரங்களில் கஞ்சா போதையில் வீட்டிலேயே படுத்து கிடப்பார். கடந்த மார்ச் மாதம் நவ்சாத் கஞ்சா போதையில் பக்கத்து வீட்டிற்குள் நுழைந்தார் அங்கு 80 வயது மூதாட்டி ஒருவர் தனிமையில் வசித்து வந்தார்.
கஞ்சா போதை கண்ணை மறைத்ததால் அந்த மூதாட்டியை நவ்சாத் கற்பழித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த அதிர்ச்சியில் அந்த மூதாட்டி மயங்கி விழுந்தார். சிறிது நேரம் கழித்து அங்கு வந்த அவரின் உறவினர் ஒருவர் இதைபார்த்து அந்த மூதாட்டியை திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.
அங்கு மயக்கம் தெளிந்த அந்த மூதாட்டி தனக்கு நேர்ந்த கொடுமையை எடுத்து சொல்லி கதறி அழுதார். இதுபற்றி போலீசிலும் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து நவ்சாத்தை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நெய்யாற்றின்கரை பஸ்நிலையத்தில் நவ்சாத் நின்றுகொண்டிருந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர்.
Average Rating