வேதாரண்யம் அருகே வீட்டிற்குள் தானாக வந்து நாயுடன் பழகும் அணில்கள்!!
வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மனைவி ராஜகுமாரி மாவட்ட ஊராட்சி உறுப்பினராக இருந்து வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் வீடு கட்ட ஏற்பாடு செய்த போது பூமியில் ராமர், சீதை, லட்சுமணர், அனுமர் சிலைகள் கிடைத்தது. அதனை வேதாரண்யம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டனர். இவரது வீடு இருக்கும் பகுதியை சுற்றி மரம், செடிகள் நிறைந்த இயற்கை சூழலில் அமைந்துள்ளது. வீடு கட்டிக் கொண்டு இருக்கும் போதே இயற்கை சூழலில் வாழ்ந்து கொண்டிருந்த அணில், கிளி ஆகியவை வீட்டிற்குள் வர ஆரம்பித்தது. அப்போது முதல் இன்று வரை வீட்டில் உள்ளவர்களிடம் சகஜமாக பழகி வருகிறது.
மேலும் அங்கு வளர்க்கப்படும் கிளிகள் சிலரை பெயர் சொல்லியும், வாங்க, வாங்க என்றும் சொல்கிறது. இந்த அணில்கள் வீட்டில் உள்ள நாயுடன் விளையாடுகிறது. இந்த அணிகளின் செயல்பாட்டை அனைவரும் பார்த்து செல்கின்றனர்.
Average Rating