அத்திப்பட்டில் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை!!

Read Time:1 Minute, 39 Second

9a0f6069-88d4-4126-bd44-8a33bd35c36e_S_secvpfமீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டை சேர்ந்தவர் சேகர் (வயது 30). காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் கப்பல் கட்டும் தளத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். இன்று காலை அவர் அத்திப்பட்டு ரெயில் நிலையம் அருகே தண்டவாள பகுதியில் நின்றார்.

அப்போது கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி மின்சார ரெயில் வந்தது. திடீரென சேகர் ரெயில் முன் பாய்ந்தார். இதில் அவரது தலை துண்டாகி என்ஜினில் சிக்கியது. உடல் அங்கேயே விழுந்தது.

சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரெயில் சென்ற பின்னர் என்ஜினில் சிக்கிய தலை தண்டவாளத்தில் விழுந்தது. இது பற்றி ரெயில் என்ஜின் டிரைவர் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

ரெயில்வே போலீசார் விரைந்து வந்து தண்டவாளத்தில் கிடந்த சேகரின் துண்டான உடல், தலையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சேகரின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. இது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வகுப்பறையில் ஆபாச படம்…குடிபோதையில் ரகளை… கோவையில் பாதை மாறும் மாணவிகள்!!
Next post இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.6 லட்சம் பறித்த வாலிபர்!!