இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.6 லட்சம் பறித்த வாலிபர்!!

Read Time:5 Minute, 4 Second

a3fe9006-14fc-496a-a4b0-a50382ec3ee9_S_secvpfகுளச்சலை அடுத்த வாணியக்குடியைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மனைவி கவிதா (வயது 36).

ஆரோக்கிய ராஜ் கேரளாவில் தங்கி இருந்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இதனால் இவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தேவையான சிறுசிறு உதவிகளை ஆரோக்கியராஜீன் உறவினர் கிங்ஸ்லிபிரிட்டோ என்பவர் செய்து கொடுத்து வந்தார்.

இதற்காக அவர் ஆரோக்கிய ராஜ் வீட்டிற்கு செல்லும் போது அவரது நண்பர் அருண் என்ற சகாய அருண் மெஜோ என்பவரையும் அழைத்துச் சென்றார். அடிக்கடி சென்று வந்ததில் அருணுக்கும், ஆரோக்கிய ராஜீன் மனைவி கவிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

அதன்பின்பு அருண் தனியாகவே கவிதா வீட்டுக்கு செல்லத்தொடங்கினார். அப்போது கவிதாவிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கினார். இது பற்றி கவிதாவின் கணவர் ஆரோக்கியராஜ், கவிதாவிடம் கேட்ட போது அருணுக்கு பணத்தை கடனாக கொடுத்து இருப்பதாக கவிதா கூறினார்.

கடந்த மாதம் ஆரோக்கிய ராஜ் கேரளாவில் இருந்து ஊருக்கு வந்தார். அப்போது அருணைப்பார்த்து கவிதாவிடம் இருந்து வாங்கிய ரூ.6 லட்சம் பணத்தை திருப்பி கேட்டார். அப்போது அருணுக்கும், ஆரோக்கிய ராஜூக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அருண் பணத்தை கொடுக்க மறுத்ததோடு கவிதாவையும் ஆபாசமாக திட்டினார்.

இது பற்றி ஆரோக்கியராஜ் கடந்த மாதம் குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மனைவி கவிதாவை ஆபாசமாக பேசி பெண்மைக்கு களங்கம் விளைவித்ததாக அருண் மீது புகார் கூறி இருந்தார். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அருணை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தார். அதற்கு பிறகும் கவிதாவிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.

பணம் கிடைக்காததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரோக்கிய ராஜ் மீண்டும் கேரளாவில் இருந்து ஊருக்கு வந்து அருணிடம் பணம் கேட்டார். அப்போதும் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் கவிதாவும், அருணும் சேர்ந்து இருப்பது போன்ற ஆபாச படங்கள் ‘வாட்ஸ்–அப்’பில் பரவியது. இதை அறிந்த கவிதா அதிர்ச்சி அடைந்தார்.

அதன்பிறகு தான் அவர் கணவரிடம் உண்மையை கூறினார். அடிக்கடி வீட்டுக்கு வந்த அருண், ஒரு நாள் தனக்கு குளிர்பானம் கொடுத்ததாகவும், அதைக்குடித்ததும் தான் மயங்கி விட்டதாகவும் கூறினார்.

அந்த நேரத்தில் அருண் தன்னை நிர்வாண கோலத்தில் படம் எடுத்து மிரட்டி ரூ.6 லட்சம் பறித்து கொண்டதாகவும், பணத்தை திருப்பி கேட்டால் நண்பர்களுக்கு ஆபாச படங்களை அனுப்பி கேவலப்படுத்தி விடுவேன் என்று மிரட்டுவதாகவும் கூறி அழுதார்.

இதையடுத்து ஆரோக்கிய ராஜ், மனைவி கவிதாவுடன் சென்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில் அருண், சிஜின்ஜாண், கிங்ஸ்லி பிரிட்டோ, கிங்ஸ்லி பிரிடோவின் மனைவி ஜெனி பர்லின்சிமோள் ஆகியோர் சேர்ந்து மனைவியின் ஆபாச படங்களை வாட்ஸ்–அப்பில் பரப்பியதாகவும், இதன் மூலம் ரூ.6 லட்சம் பணம் பறித்து ஏமாற்றியதாகவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதன்பேரில் குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் உமா விசாரணை நடத்தி அருண், சிஜின்ஜாண், கிங்ஸ்லி பிரிட்டோ, கிங்ஸ்லி பிரிடோவின் மனைவி ஜெனிபர்லின்சிமோள் ஆகிய 4 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அத்திப்பட்டில் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை!!
Next post பண்ருட்டியில் திருமணமான 6 மாதத்தில் என்ஜினீயர் விபத்தில் பலி!!