மட்டில் வெற்றுக் காணியில் கிடந்த ஆணின் சடலம்!!
Read Time:1 Minute, 27 Second
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கீச்சான்பள்ளம் கிராமத்தில் வெற்றுக் காணியொன்றுக்குள் கிடந்த ஆணின் சடலமொன்று இன்று (26) காலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிசார் சடலத்தை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிசார் குறிப்பிட்டனர்.
சம்பவத்தில் பலியானவர் காங்கேயனோடையைச் சேர்ந்த எம்.நஜிமுதீன் (44) என அடையாளம் காணப்பட்டுள்ளது,
இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் குறிப்பிட்டனர்.
மேலும் இவர் நேற்றிரவு தனது வீட்டுக்கு செல்லாத நிலையில் குடும்பத்தினர் தேடியதாகவும் எனினும் இன்று காலையில் இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் மேலும் குறிப்பிட்டனர்.
Average Rating