அறிவியல் மாமேதை அப்துல்கலாம் மறைவுக்கு 7 நாட்கள் அரசு முறை துக்கம்- மத்திய அரசு அறிவிப்பு!!
Read Time:1 Minute, 19 Second
இந்திய தேசத்தின் அறிவியல் மாமேதையான முன்னாள் ஜனாதிபதி மேதகு டாக்டர். அப்துல் கலாம் மறைவுக்கு நாடு தழுவிய அளவில் 7 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை செயலாளர் கோயல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இன்று மேகலயா மாநிலம் ஷில்லாங்கில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டபோது மாரடைப்பால் மயங்கி விழுந்தார். ஷில்லாங் பெத்தானி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவர் இறந்த செய்தியைக் கேட்டு ஒட்டு மொத்த இந்திய தேசமும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. அவரது ஈடு செய்ய முடியாத இழப்பையடுத்து, 7 நாட்கள் நாடு தழுவிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படுவதாக மத்திய உள்துறைச் செயலாளர் கோயல் தெரிவித்துள்ளார்.
Average Rating