தாஜூடினின் சடலம் தோண்டி எடுக்கப்படுமா? நாளை முடிவு!!
Read Time:1 Minute, 6 Second
றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் மரணம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் விடுக்கப்பட்ட கோரிக்கை குறித்த முடிவை நாளை அறிவிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது தாஜூடினின் சடலத்தை தோண்டி எடுக்க வேண்டும் என குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கோரப்பட்டிருந்தது.
முன்வைக்கப்பட்ட தகவல்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் குறித்த கோரிக்கை தொடர்பிலான முடிவை நாளை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.
Average Rating