செளதி: பிக்பாக்கெட் அடித்தவரின் கை துண்டிப்பு
Read Time:1 Minute, 10 Second
செளதி அரேபியாவில் பிக் பாக்கெட் அடித்தவரின் கையை துண்டித்து அந்நாட்டு அரசு தண்டனை வழங்கியுள்ளது.எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் அம்ர் நாசர். இவர் மெக்காவில் உள்ள பெரிய மசூதியில் பிக் பாக்கெட் அடித்துவிட்டு அங்கிருந்து வெளியேற முயன்றார்.இதை கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பிக்பாக்கெட் அடித்த அவரது வலது கையை துண்டிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இதுகுறித்து செளதியின் வெளியுறவு துறை அமைச்சக அதிகாரி ஜோஹீர் அல் ஹாரிதி கூறியதாவது,பிக் பாக்கெட் அடித்தவர்களில் இந்த வருடம் மட்டும் 130 பேருக்கு மன்னிப்பு அளித்துள்ளோம். கடந்த 2006ம் வருடத்தை ஒப்பிடும்போது இது அதிகமாகும் என்றார்.