சஜீன் வாஸ், சொகா மல்லி உள்ளிட்ட ஏழ்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!!
Read Time:1 Minute, 14 Second
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜீன் வாஸ் குணவர்த்தனவுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இவரை எதிர்வரும் எட்டாம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர் ஒருவரை சுட்டுக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பிரேமலால் ஜெயசேகர எனப்படும் சொகா மல்லி உள்ளிட்ட அறுவருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இவர்களை செப்டம்பர் 8ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க பெல்மடுல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Average Rating