மஹிந்தவின் வாக்குமூலத்தையடுத்து சுசிலிடம் விசாரணை!!

Read Time:1 Minute, 29 Second

159168576Untitled-1கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, அரச ஊடகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சார நடவடிக்கைகளுக்காக 115 மில்லியன் ரூபாய் பணம் செலுத்தப்படாமை குறித்த விசாரணைகளுக்காக இன்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் உள்ளிட்ட மேலும் சிலரும் இதன்போது வாக்குமூலமளிக்க வந்துள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார்.

அண்மையில் குறித்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டுக்கு சென்று ஆணைக்குழு வாக்குமூலத்தை பதிவு செய்தது.

இதன்போது அவர் பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தும் கட்சியினாலேயே மேற்கொள்ளப்பட்டதாகவும் இது குறித்து கட்சியின் செயலாளரிடமே வினவ வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

அப்போது கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவர் சுசில் பிரேமஜயந்த என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதிய அரசு அமைந்த பின் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது!!!
Next post பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழைக்கான சாத்தியம்!!