பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழைக்கான சாத்தியம்!!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (30) மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகிறது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மாகாணங்களிலும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுகிறது. இம் மழை வீழ்ச்சியிள் அளவு 100 மில்லி மீற்றரை தாண்டலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அத்துடன் ஊவா கிழக்கு மாகாணங்களில் மாலை வேளையில் குறிப்பாக இரண்டு மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய நேரத்தில் மின்னல் அபாயங்களும் ஏற்படக்கூடுமெனவும் அதனால் பொதுமக்கள் அனைவரையும் மிகவும் அவதானத்துடன் இருக்கும் படி வானிலை அவதான நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இரவில் அதிகளவிலான இடி முழக்கங்கள் ஏற்படக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து பிரதேசங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழைக்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுகிறது.
Average Rating