கழிவுத் தொட்டியில் சிசுவை வீசியது யார்?
Read Time:48 Second
அனுராதபுரம் வைத்தியசாலையின் கழிவு நீர் சேகரிக்கும் தொட்டியில் இருந்து சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் பராமரிப்பு பணிகளில் பணிகளில் ஈடுபடும் ஊழியர் ஒருவர் நேற்று பகல் இதனை கண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அனுராதபுரம் நீதவான் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் பிரேதப் பரிசோதனைக்கும் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating