வாகன விபத்தில் பெண்ணொருவர் பலி…!!
Read Time:59 Second
தம்புள்ள – இப்பன்கடுவ பிரதேசத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் பலியானதுடன் மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.
முச்சக்கர வண்டி ஒன்றும் தனியார் பயணிகள் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதிலே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி உள்ளிட்ட ஐந்து பேரும் தம்புள்ள ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர், இதில் நான்கு பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி மருத்துவனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் மெல்சிறிபுர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating