தன்னுயிரை கொடுத்து பலாத்கார கும்பலிடம் இருந்து இளம்பெண்ணை காப்பாற்றிய இளைஞர்…!!
சென்னையில் பலாத்கார கும்பலிடம் இருந்து இளம்பெண் ஒருவரை போராடி காப்பாற்றிய 20 வயது இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ரயில்வே பொலிசார் இது குறித்து கூறுகையில், மறைமலை நகரை சேர்ந்த ஜான்சன் (20), திங்கள்கிழமை இரவு, மறைமலை நகர் செல்வதற்கான ரயிலை பிடிக்க பல்லாவரம் ரயில் நிலைய மேம்பாலம் கீழே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது அங்கே இளம்பெண் ஒருவர் உதவிக்காக அலறிய சத்தம் கேட்டுள்ளது.
சத்தம் கேட்ட திசையை நோக்கி ஜான்சன் சென்றபோது, குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டிக் கொண்டிருந்த இளம்பெண் ஒருவரிடம் 4 பேர் கொண்ட கும்பல் தகராறு செய்து கொண்டிருந்துள்ளனர்.
அந்த பெண்ணுக்கு உதவி செய்ய சென்ற ஜான்சன், அந்த கும்பலில் இருந்த கார்த்திக் என்ற நபரை தாக்கிய போது, கார்த்திக்கின் பிடியில் இருந்து இளம்பெண் தனது குழந்தையை எடுத்துக் கொண்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியுள்ளார்.
இதனால் கோபமடைந்த கார்த்திக் ஜான்சனை கத்தியால் குத்தியுள்ளார்.மேலும், மற்ற மூவரும் இணைந்து கொண்டு ஜான்சனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
பின்னர் ஜான்சனை அருகிலிருந்த புதரில் வீசிச் சென்றுள்ளனர். போதிய வெளிச்சம் இல்லாத பகுதி என்பதால், வெகு நேரம் கழித்தே இளைஞர் ஒருவர் புதரில் கிடப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர் என தெரிவித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பாக 4 பேரையும் பொலிசார் தீவிரமாக தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating