ஐ.எஸ்.தீவிரவாத குழுவில் இருந்து தப்பிய பிரித்தானிய தாய்: கணவரையும் மீட்டெடுக்க உறுதி (வீடியோ இணைப்பு)…!!

Read Time:3 Minute, 8 Second

british_mother_002-615x500ஐ.எஸ்.தீவிரவாத குழுவினரின் செயல்பாடுகளில் ஒத்துப்போக முடியாத பிரித்தானிய பெண் ஒருவர் சிரியாவில் இருந்து தப்பி வேறுபகுதிக்கு தஞ்சமடைந்துள்ளார்.
பிரித்தானியாவின் Manchester பகுதியில் குடியிருந்து வந்தவர்கள் Shukee Begum மற்றும் Jamal al-Harith குடும்பத்தினர்.

இந்நிலையில் கடந்த 18 மாதம் முன்பு ஜமால் பிரித்தானியாவில் இருந்து துருக்கி வழியாக சிரியா சென்றுள்ளார்.

ஐ.எஸ்.குழுவில் இணைந்து போராடி வரும் ஜமாலின் அழைப்பினை ஏற்று அவரது மனைவியும் 5 குழந்தைகளுக்கு தாயான Shukee Begum கடந்த ஆண்டு தமது குழந்தைகளுடன் சிரியாவுக்கு சென்றுள்ளார்.

இதனிடையே ஐ.எஸ்.அமைப்பினரின் செயல்பாடுகளும் அங்குள்ள பெண்களின் நடவடிக்கைகளும் தமக்கு ஒத்துவரவில்லை என தெரிந்ததும் வேறு ஒரு தீவிரவாத குழுவினரின் உதவியுடன் சிரியாவில் இருந்து தப்பியுள்ளார்.

சிரியாவில் சென்ற பின்னர் Shukee Begum ஐ.எஸ்.அமைப்பினரின் பாதுகாப்பில் அமைந்துள்ள கூட்ட நெரிசல் மிக்க ஒரு அறையில் டஜன் கணக்கிலான வெளிநாட்டு பெண்களுடன் தங்க வைத்துள்ளனர்.

நூற்றுக்கணக்கான குடும்பங்கள் குடியிருக்கும் அந்த சிறிய கட்டிடத்தில் அனைவருக்குமாக ஒன்றிரண்டு சமையல் அறையும் அது போலவே ஒன்றிரண்டு குளியல் அறைகளும் பொதுவாக இருந்தனவாம்.
பெரும்பாலான நேரம் குழந்தைகளின் அழுகுரலும், பெண்கள் ஐ.எஸ்.குழுவினர் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவுகளை பார்த்து விவாதிப்பதுமாக உள்ளனர்களாம்.

சட்டம் பயின்ற பட்டதாரியான Shukee Begum தமது கணவரை ஐ.எஸ்.குழுவில் இருந்து மீட்டெடுக்கவே சிரியா சென்றுள்ளதாகவும், தாம் ஒருபோதும் தீவிரவாதத்தை ஆதரித்ததில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா திரும்பினால் அரசு தம்மீது பயங்கரவாத குற்றச்சாட்டு பதிய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

காரணம், தலிபான் ஆதரவாளரான al-Harith அமெரிக்காவின் Guantanamo Bay சிறையில் 2 ஆண்டு காலம் இருந்த போது பிரித்தானியா அரசின் நடவடிக்கையாலே வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தந்தை இறந்த மனஉளைச்சலால் மகள் தற்கொலை..!!
Next post தூக்கத்தை கெடுத்ததால் சிறுவனின் கை விரல்களை துண்டித்த இளம்பெண்…!!