ஸ்காட்லாந்தில் தோன்றும் வண்ணங்களில்லாத வானவில்..!!

Read Time:1 Minute, 27 Second

419441eb-903f-4820-913a-af6f698007a6_S_secvpfஸ்காட்லாந்து நாட்டின் கொல்லோச்சன் பகுதியில் வானவில் வண்ணங்களின்றி தோன்றியது. ‘ஃபாக்பவ்’ (மூடுபனி வில்) என இது பிரபலமாக அழைக்கப்படுகின்றது.

சில தினங்களுக்கு முன் ரிச்சர்ட் தவுல்சன் (53) தனது நாயை அழைத்துக்கொண்டு வெளியில் வாக்கிங் செல்லும் போது, எதேச்சையாக வானவில் போல வண்ணமின்றி இருந்த மூடுபனி வில்லை கவனித்தார். ஏதோ வித்தியாசமாக உள்ளதே எனப் படம்பிடித்து அதை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார்.

வானவில் போலத்தான் இந்த மூடுபனி வில்லும் தோன்றுகின்றதாம். சுமார் 0.05 மில்லி மீட்டருக்கும் குறைவான அளவிலான நீர்த்துளிகள் ஒன்று கூடும்போது இவ்வாறு ஏற்படுகின்றது.

சிறிய அளவில் ஒளி இந்த நீர்த்துளிகளை ஊடுருவும்போது சூரியனுக்கு எதிர்திசையில் வளைவுடனான வெள்ளை வானவில் தோன்றுகின்றது.

மூடுபனி அதிகமுள்ள காலத்தில் இந்த வெள்ளை வானவில் தோன்றும் வாய்ப்பு அதிகம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாலாட்டைக் கேட்டு உறங்கும் மூன்று வார யானைக்குட்டி: வீடியோ இணைப்பு..!!
Next post தேவாலய ஆலோசனைக் கூட்டத்தில் மகனை அடித்துக்கொன்ற பெற்றோர் கைது…!!