குளியல் அறையில் கேமரா பொருத்தி இளம்பெண்கள் குளிப்பதை ரசித்த வீட்டு உரிமையாளர்…!!
சிட்லபாக்கம் சண்முகா நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன் (30). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
கீழ் வீட்டில் வசித்து வரும் அவர் மாடி வீட்டை 4 இளம்பெண்களுக்கு வாடகைக்கு விட்டு இருந்தார். அவர்கள் வெவ்வேறு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
இளம்பெண்கள் தங்கி இருந்த வீட்டின் குளியல் அறையில் துணிகளை தொங்க விட இரும்பு கம்பி இல்லை. அதனை அடித்து தரும்படி அவர்கள் தியாகராஜனிடம் தெரிவித்தனர். நேற்று முன்தினம் இரும்பு கம்பி அடிக்கப்பட்டது.
இந்த நிலையில் குளியல் அறைக்கு இளம்பெண் ஒருவர் சென்றபோது அதில் ரகசிய காமிரா பொருத்தப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சிட்லப்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது குளியல் அறையில் பொருத்தப்பட்டிருந்த காமிரா மூலம் கீழ் வீட்டில் இருந்தபடி தியாகராஜன், லேப்–டாப்பில் பெண்களின் குளியல் காட்சிகளை ரசித்து வந்தது தெரிந்தது.
இதையடுத்து தியாகராஜனை போலீசார் கைது செய்தனர். ரகசிய காமிரா, லேப்–டாப் பறிமுதல் செய்யப்பட்டது.
Average Rating