உடலுறவுக்கு மறுத்த கணவரை கடுமையாக தாக்கிய பெண் கைது…!!
அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர், பாலியல் உறவுக்கு மறுத்த தனது கணவரை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென் கரோலினா மாநிலத்தைச் சேர்ந்த சோன்ட்ரா ஏர்ல் கெல்லி எனும் 51 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
தன்னுடன் பாலியல் உறவுகொள்ள வருமாறு தனது கணவரை சோன்ட்ரா கெல்லி அழைத்தபோது அவரின் கணவர் மறுத்தாராம்.
அதையடுத்து, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த தனது கணவரை “நன்சக்கு” எனும் தற்காப்புக் கலை உபகரணத்தின் மூலம் முகத்திலும் தலையிலும் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால், இப் பெண்ணின் கணவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. இப் பெண்ணின் கணவர் தன்னை தற்காத்துக்கொள்ள முற்பட்ட போது அவரின் கையிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சோன்ட்ரா கெல்லி, தனக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், அக் காயங்கள் அவராகவே ஏற்படுத்திக்கொண்டவையாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சோன்ட்ரா கெல்லிக்கு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
Average Rating