இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது அசீட் வீச்சு…!!
Read Time:1 Minute, 20 Second
வீரகெடிய பகுதியில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபரைக் கைதுசெய்யச் சென்ற பொலிஸார் இருவர் மீது அசீட் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வலஸ்முல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாஜன்ட் மற்றும் கான்ஸ்டபில் ஒருவருமே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
பிடியாணையுடன் சந்தேகநபரைக் கைதுசெய்ய அவரது வீட்டுக்குச் சென்ற வேளை, குறித்த இரு பொலிஸார் மீதும் தனது மகனுடன் இணைந்து அவர் தாக்க முற்பட்டுள்ளார்.
அதனைத் தடுக்க இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் முற்பட்ட வேளை, அங்கு வந்த சந்தேகநபரின் மனைவி அவர்கள் மீது அசீட்டை வீசியுள்ளார்.
இதனையடுத்து, சம்பவத்தில் காயமடைந்த பொலிஸார் வலஸ்முல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், சந்தேகநபர், அவரது மகன் மற்றும் மனைவி ஆகியோர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Average Rating