பொலிஸ் மா அதிபருக்கு எதிராகப் பிலியந்தலைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வழக்கு
Read Time:1 Minute, 16 Second
பிலியந்தலை பேரூந்து குண்டு வெடிப்புச்சம்பவம் இடம்பெற்று இரண்டு தினங்களுக்கு பி;ன்னர் பொலிஸ் மா அதிபரினால் இடமாற்றம் செய்தமை சட்டவிரோதமானது எனத் தெரிவித்து பிலியந்தலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வழக்க தாக்கல் செய்துள்ளார் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலனை செய்த உயர்நீதிமன்றம் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த பொலிஸ் மா அதிபர் மற்றும் விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டது பொலிஸ் மா அதிபருக்கு இடமாற்றங்களை மேற்கொள்வதற்கு அதிகாரம் இல்லையென பிலியந்தலை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார் இந்த திடீர் இடமாற்றம் அரசியல் சாசனத்தின் 12 (01) என்ற சட்டத்திற்கு அமைய அடிப்படை உரிமை மீறலாகும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரியவருகிறது
Average Rating