சிரியாவில் உள்நாட்டு போர் உச்சகட்டம் : வான்வழித் தாக்குதலில் 59 பேர் உயிரிழப்பு !!
சிரியாவில் 4வது நாளாக நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் 15 குழந்தைகள் உட்பட 59 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள கிளர்சியாளர்கள் கட்டுப்பாட்டு பகுதியில் சிறிய அரசுப்படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தினர். 4வது நாளாக தொடர்ந்து நடத்திய தாக்குதலில் 59 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். அரசுப்படை விமானங்கள் குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்துவதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
சிரியாவில் கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் பசி, கொடுமை, வான்வழித்தாக்குதல் உள்ளிட்டவற்றால் இதுவரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். எட்டு ஆண்டுகளில் தற்போது நடந்து வரும் தாக்குதலே பயங்கரமானதாக கருதப்படுகிறது. ஆறு இடங்களில் அரசுப் படையினர் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து உள்நாட்டு போர் நடைபெற்று வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Average Rating