புலிகளின் பதிலில் உத்தரவாதமாக கருத முடியாது – கண்காணிப்புக்குழு
கடல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக அரசாங்கத்திடமும், புலிகளிடமும் உத்தரவாதம் கோரியிருந்த போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுக்கு புலிகள் கடிதம் அனுப்பியிருந்ததாக தெரிவித்துள்ளனர்.
புலிகளின் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயம் கடல் கண்காணிப்பு நடவடிக்கைக்கு உத்தரவாத கடிதத்திற்கான பதிலென கருதமுடியாது ஏனென்றால் கண்காணிப்புக்குழு கடிதத்தில் குறிப்பிட்டிருந்த எந்த விடயத்திற்கும் புலிகள் பதில் தெரிவிக்கவில்லை.
புலிகளின் உத்தரவாதம் கிடைக்கும்வரை கடல் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்த எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என பத்திரிகைக்கு கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் ஹெலன் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 30ம் திகதி ஜப்பான் டோக்கியோவில் நடைபெறவுள்ள இணைத்தலைமைத்துவ நாடுகளின் கூட்டத்தில் கண்காணிப்புக்குழுத் தலைவர் கலந்து கொண்டு இலங்கை விவகாரம் குறித்து விபரிப்பார் என குறிப்பிட்டுள்ளார்.
கடல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக அரசாங்கத்திடமும், புலிகளிடமும் உத்தரவாதம் கோரியிருந்த போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுக்கு புலிகள் கடிதம் அனுப்பியிருந்ததாக தெரிவித்துள்ளனர். புலிகளின் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயம் கடல் கண்காணிப்பு நடவடிக்கைக்கு உத்தரவாத கடிதத்திற்கான பதிலென கருதமுடியாது ஏனென்றால் கண்காணிப்புக்குழு கடிதத்தில் குறிப்பிட்டிருந்த எந்த விடயத்திற்கும் புலிகள் பதில் தெரிவிக்கவில்லை.
புலிகளின் உத்தரவாதம் கிடைக்கும்வரை கடல் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்த எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என பத்திரிகைக்கு கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் ஹெலன் தெரிவித்துள்ளார்.
Average Rating