தேசிய பிரச்சினை தொடர்பில் எந்தவொரு நபரும் நிபத்தனை விதிக்க முடியாது -பாதுகாப்புப் பேச்சாளர்
Read Time:1 Minute, 26 Second
தேசிய பிரச்சினை தொடர்பில் எந்தவொரு நபரும் நிபத்தனை விதிக்க முடியாதென்று பாதுகாப்புப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இத்தகைய நிபந்தனைகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் அடிபணியப் போவதில்லையென்றும் அவர் கூறியுள்ளார். இவ்விடயம் ஜனாதிபதியால் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ள விடயமாகும். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெறுவதற்கும் தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்த இரு விடயங்களையும் ஒன்றுபடுத்தி நிபந்தனைகளை விதிப்பதற்கு எவராவது முயற்சி செய்தால் அம்முயற்சி தொடர்பில் அரசாங்கம் ஒருபோதும் அக்கறையெடுக்கப் போவதில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதென்ற அரசாங்கத்தின் திட்டம் தற்போது பூர்த்தியடையும் தருவாயை எட்டியுள்ளது என்பதையும் அவர் இங்கு சுட்டிக் காட்டியுள்ளார்.
Average Rating