ஆலையடிவேம்பு கிரனைட் வீச்சு, ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் படுகாயம்
Read Time:1 Minute, 21 Second
அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பகுதியில் இடம்பெற்ற கிரனைட் வீச்சுத் தாக்குதல் சம்பவத்தின்போது ஒருவர் உயிரிழந்ததுடன். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 8.45மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். உந்துருளியில் வந்த இரண்டு பேர் ஆலையடிவேம்பு இராமகிருஸ்ணன் வீதியில் அமைந்துள்ள பிரதேச செயலாளரின் வீட்டின்மீது கிரனைட் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளின் கண்ணாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் கிழக்கு மாகாண கால்நடை விவசாய அமைச்சர் நவரட்ணராஜாவின் இணைப்பாளரான சாமித்தம்பி அருள்ராஜா 34வயது, என்றும், காயமடைந்தவர் 36வயதான தங்கராஜா வாமதேவன் என்றும் தெரியவந்துள்ளது.
Average Rating