துமிந்த சில்வா விளக்கமறியலில்
Read Time:1 Minute, 25 Second
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நால்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா நேற்று சி.ஐ. டியினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு நவலோகா தனியார் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைபெறும் வேளையில் கைதான கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வாவை எதிர்வரும் 14ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக மாஜிஸ்ரேட் சந்துன் விதான நேற்று உத்தரவிட்டுள்ளார். சிங்கப்பூரில் இருந்து விமானம்மூலம் வந்து நவலோகா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் துமிந்த சில்வா தொடர்பாக தெரிவிக்கப்பட்ட காரணங்களைப் பரிசீலித்து ஆஸ்பத்திரிக்குச் சென்று அவரைக் கண்காணித்த பின்னர் மேலதிக மாஜிஸ்ரேட் துமிந்த சில்வாவை விளக்கமறியலில் வைக்கும் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
Average Rating