கொளத்தூரில் பெண்ணிடம் செயின் பறிப்பு: 2 வாலிபர்கள் கைது!!
கொளத்தூர் தென் பழனி நகரை சேர்ந்தவர் மரியம் ஜோசப். இவரது மனைவி மரியம்மாள் (48). இவர் உறவினர் வீட்டுக்கு செல்ல கொளத்தூரில் பஸ் நிலையத்தில் நின்றார்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மரியம்மாள் கழுத்தில் கிடந்த 4 பவுன் செயினை பறித்து சென்றனர்.
இது குறித்து ராஜமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று ராஜமங்கலம் போலீஸ் நிலையம் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளிலில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் கொளத்தூரை சேர்ந்த கணேஷ் (26) அம்பத்தூரை சேர்ந்த முரளி (22) என்பதும் மரியம்மாளிடம் நகையை பறித்ததும் தெரிய வந்தது.
அவர்களிடம் இருந்து 4 பவுன் நகை – மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Average Rating