ராஜாக்கமங்கலம் அருகே மது விற்ற பெண் கைது!!
Read Time:46 Second
ராஜாக்கமங்கலம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜான் போஸ்கோ மற்றும் போலீசார் நேற்று பருத்திவிளை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றுக் கொண்டிருந்ததாக ஒரு பெண்ணை மடக்கிப் பிடித்தனர்.
அவரிடம் இருந்த 22 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர், அனந்த நாடார்குடியிருப்பு பகுதியை சேர்ந்த பிரின்ஸ் என்பவரது மனைவி விஜயகுமாரி(வயது 44) என்பது தெரியவந்தது.
Average Rating