தேர்தலுக்கு முன் தேசிய அடையாள அட்டை!!
Read Time:1 Minute, 4 Second
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 15ம் திகதிக்கு முன்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்ப படிவங்களுக்கு விரைவில் அடையாள அட்டை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் சரத்குமார தெரிவித்தார்.
இதேவேளை, தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொடுக்கும் நடமாடும் சேவை எதிர்வரும் 11ம் திகதி தொடக்கம் 21ம் திகதிவரை நடத்தப்படவுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
Average Rating