ஆப்கானில் பனிப்பாறை சரிவு; 31பேர் பலி!!
Read Time:49 Second
ஆப்கானிஸ்தானில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக இடம்பெற்ற பனிப்பாறை சரிவுகளில் சிக்கி குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
காபூலின் வடக்கேயுள்ள பஜைஷிர் மாகாணத்தில் அதிகளவு உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
அங்கு 22 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சரிந்து விழுந்த பனிப்பாறைகளின் கீழ் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புப்பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
Average Rating