ரஷ்ய விமான விபத்து இலங்கை ஜனாதிபதி இரங்கல்…!!
ரஷ்ய பயணிகள் விமானம் எகிப்தில் வைத்து விபத்துக்குள்ளானமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரங்கல் வௌியிட்டுள்ளார்.
இலங்கை மக்களுடன் இணைந்து ரஷ்ய மக்கள் மற்றும் அரசாங்கத்திற்கு ஜனாதிபதி தமது இரங்கலை தெரியப்படுத்தியுள்ளார்.
நேற்று எகிப்து நாட்டில் உள்ள சினாய் கோஸ்டல் ரிசார்ட்டில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீ்ட்டர்ஸ்பெர்கிற்கு 217 பயணிகள், 7 ஊழியர்களுடன் புறப்பட்டுச் சென்ற பயணிகள் விமானம் 23 நிமிடங்களில் மத்திய சினாய் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
செங்கடலை ஒட்டியுள்ள கடற்கரை நகரமான ஷர்ம்-அல்-ஷேக் நகரில் இருந்து திரும்பிய அந்த விமானத்தில் இருந்தவர்கள் பெரும்பாலும் ரஷிய நாட்டு சுற்றுலா பயணிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 17 குழந்தைகள் உட்பட விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாகியிருக்கலாம் என வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
Average Rating