ஜூலை முதல் பொலித்தீன் பாவனைக்கு தடை..!!
உணவுப் பொருட்களை பொதியிடப் பயன்படுத்தும் பொலித்தீனை (லஞ்சீட்) தடைசெய்வதற்கு சுற்றுச் சூழல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த திட்டத்தின் முதற் கட்டமாக எதிர்வரும் ஜூலை மாதத்திலிருந்து அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளில் லஞ்சீட் பாவனையினை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
லஞ்சீட் பாவனைக்கு பதிலாக உணவுப் பொருட்களை பொதியிடுவதற்குப் பொருத்தமான பாத்திரங்கள் மற்றும் வாழை இலை யை பயன்படுத்துவதற்கான ஊக்குவிப்பு வேலைத்திட்டங்களை முன்வைக்கவுள்ளதாக சுற்றுச் சூழல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
பொலித்தீன் பாவனையினை முழுமையாக இல்லாதொழிப்பதனை பிரதான நோக்கமாகக்கொண்டு முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டத்தை எதிர்வரும் ஜூலை மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக சுற்றுச் சூழல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் மேர்வின் லால் தர்மசிறி தெரிவித்துள்ளார். இதன் முதல் கட்டம் அரச சேவைகள் திணைக்களம் மற்றும் கல்வியமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் லஞ்சீட் பாவனையினை தடைசெய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் மற்றும் அரச, தனியார் துறை யினர் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.
Average Rating