தனியாக வீடு திரும்பிய சிறுமி வல்லுறவு..!!
13 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 20 வயது இளைஞன் ஒருவர் சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரவிட்டாகார கொடஎலபிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியின் வீட்டுக்கு அண்மையில் வசிக்கும் இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவராவார்.
குறித்த சிறுமியின் மூத்த சகோதரன் சிறுமியும் அவளது தாயும் வசிக்கும் வீட்டுக்கு அருகாமையில் வசித்து வந்துள்ளார்.
இதனால் இச்சிறுமி தினமும் இரவு வேளையில் தனது சகோதரனின் வீட்டுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்ப்பதற்காகச் செல்வதை வழக்கமாக க் கொண்டிருந்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற தினம் இரவும் இச்சிறுமி வழமை போல தனது சகோதரனின் வீட்டுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்ப்பதற்காகச் சென்றிருந்து பின்னர் தனது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்துள்ளார்.
இதன்போது சிறுமியை வழிமறித்துள்ள சந்தேகநபர் அவளை பலவந்தமாக தனியான இடம் ஒன்றுக்கு இழுத்துச் சென்று இக்குற்றத்தைப்புரிந்துள்ளார்.
தனது அயல்வீட்டுக்கார இளைஞர் தன்னை இவ்வாறு வல்லுறவுக்குட்படுத்திய சம்பவத்தை தனது தாயிடம் கூறினால் எதுவும் நடக்கப் போவதில்லை என்பதை ஊகித்துக் கொண்டுள்ள இச்சிறுமி இவ்விடயத்தை தமது பிரதேச கிராம சேவை அதிகாரியிடம் தெரிவித்து அவர் ஊடாக சிலாபம் பொலிஸாருக்கும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சிறுமியின் தகவலையடுத்து உடன் செயற்பட்டுள்ள சிலாபம் பொலிஸார் சந்தேக நபரான இளைஞரைக் கைது செய்துள்ளனர்.
Average Rating