சட்டவிரோத போதைபொருள் தொடர்பில் சுங்க பிரிவிடம் ஜனாதிபதி கேள்வி ..!!!
Read Time:1 Minute, 22 Second
நாட்டுக்குள் சட்டவிரோதமாக போதைபொருள் கொண்டுவருவதை தடுக்கும் பொருட்டு, இலங்கை சுங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த பிரிவிடம் கேட்டறிந்தார்.
இலங்கை சுங்க அதிகாரிகளுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு, நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
கடந்த வருடத்தில், சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட போதை பொருள் குறைவடைந்துள்ளதா? அல்லது உயர்வடைந்துள்ளதா?
கடந்த தினத்தில் இவ்வாறு கொண்டுவரப்பட்டவை எங்கிருந்து வந்தன அதனை கண்டறிந்தீர்களா? எனவும் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சுங்க திணைக்கள அதிகாரிகள், இதன்பொருட்டு 24 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.
இதனிடையே, கொள்கலன்களை சோதனை செய்ய நவீன தொழிநுட்ப கருவிகள் தேவை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
Average Rating