பவானி ஆற்றுப்பாலத்திலிருந்து கீழே குதித்து முதியவர் தற்கொலை: போலீசார் விசாரணை…!!
Read Time:1 Minute, 10 Second
பவானி லட்சுமி நகர் காவிரி ஆற்று பாலத்தில் நடந்து சென்ற 70 வயது முதியவர் திடீரென கீழே குதித்தார்.
தண்ணீர் இல்லாத இடத்தில் அவர் குதித்ததால் உடலில் பலத்த அடிபட்டது. இதைக்கண்டு அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பிறகு அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
ஆற்றுப்பாலத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று தெரியவில்லை.
அந்த முதியவர் ஊதா கலரில் சட்டையும், வேட்டியும் அணிந்திருந்தார். இது குறித்து சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating