சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஒரு குழந்தையின் தந்தை விளக்கமறியலில்…!!
திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில், கடந்த மூன்றரை வருடங்களுக்கு முன்னர் பதினேழு வயதுடைய சிறுமியை காதலித்து கொழும்புக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய வழக்கு தொடர்பான தவணைகளுக்கு சமூகமளிக்காதவரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.
கிண்ணியா-இடிமன் பகுதியைச் சேர்ந்த 34வயதுடைய ஒரு குழந்தையின் தந்தையான எப்.முபாரக் என்பவரே இம் மாதம் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டு வழக்குகள், திருகோணமலை நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் ஒரு வழக்குத் தவணைக்கு சமூகமளிக்காத நிலையில், கிண்ணியா பொலிஸார் வெள்ளிக்கிழமை (22) மாலையில் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating