பனிச்சறுக்கு விளையாட சென்ற முதியவர்: சடலமாக திரும்பி வந்த பரிதாபம்…!!
சுவிட்சர்லாந்து நாட்டில் பனிச்சறுக்கு விளையாட சென்ற 71 வயதான முதியவர் ஒருவர் சடலமாக திரும்பி வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் உரி மாகாணத்தில் உள்ள Schachentaler என்ற பகுதியில் 71 வயதான முதியவர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்.
பனிச்சறுக்கு விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உள்ள இவர் கடந்த வியாழக்கிழமை பிற்பகல் வேளையில் விளையாடுவதற்காக சென்றுள்ளார்.
ஆனால், இரவு வேளை ஆனபொழுதும் அவர் வீடு திரும்பாததால் அச்சம் அடைந்த குடும்பத்தினர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
நேற்று ஹெலிகொப்டரை தயார் செய்த மீட்புக் குழுவினர் பனிச்சறுக்கு விளையாடச் சென்ற பகுதி முழுவதும் தேடுதல் வேட்டையை நடத்தியுள்ளனர்.
ஆனால், பகல் முழுவதும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இரவு சுமார் 8.30 மணியளவில் உயிரற்ற நிலையில் அவரது சடலத்தை பொலிசார் கண்டு பிடித்துள்ளனர்.
சடலத்தை ஆய்வு செய்த மீட்புக்குழுவினர், பனிச்சறுக்கு விளையாடியபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
எனினும், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating