முல்லைத்தீவு பெண்தலைமைத்துவ குடும்பங்கள் கவனயீர்ப்பு போராட்டம்…!!

Read Time:1 Minute, 38 Second

52679887-300x225முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக பெண் தலைமைக் குடும்பங்கள் இன்று புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

தமக்கான நிரந்தர வீட்டுத் திட்டத்தினை கோரி, குடியிருக்க வீடில்லாமல் தவிக்கும் பெண் தலைமைக் குடும்பங்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரிடம் கையளித்தனர்.

மேலும், 2012 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை வீட்டுத் திட்டங்களில் தங்களுடைய பெயர்கள் வரவில்லை என்றும் இப்பொழுது வந்திருக்கும் பெயர் பட்டியலிலும் தங்கள் பெயர்கள் வரவில்லை என்றும் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இனிவரும் மழைக் காலங்களில் தங்களுடைய தற்காலிக குடிசைகளால் ஈடுகொடுக்க முடியாதென்றும், அதற்காகவே இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள மிக வேதனையுடன் குறிப்பிட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெள்ளவத்தையில் ஒரு கோடி ரூபா போதைப் பொருளுடன் மூவர் கைது…!!
Next post 7 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வைத்தியர் சம்மாந்துறை பொலிஸாரால் கைது…!!