கர்ப்பிணிப் பெண்ணொருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு…!!
புத்தளம் – சாலியபுர பிரதேசத்தில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் பொலிஸார் தன்னைத் தாக்கியதாக தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
தனது கணவர் வீட்டிலில்லா சந்தர்ப்பத்தில் வீட்டுக்குள் நுழைந்த பொலிஸார் நால்வர் தன்னை தள்ளிவிட்டதாகவும், இதனால் தனது வயிற்றுப் பகுதியில் அடிபட்டதாகவும் தெரிவித்துள்ள குறித்த பெண் கர்ப்பிணியான தான் பொலிஸாரின் தாக்குதலுக்கு பின் வயிறு வலியினால் அவதியுறுவதாகவும் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் தனது கணவர் எங்கே எனக் கேட்டுக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்ததாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
எனினும் தனது கணவனை பொலிஸார் தேடிக்கொண்டு வந்தமைக்கான காரணம் தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ள சாலியவௌ பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தனக்கு இதுபற்றி தெரியாது என்றும் கடமை நிமித்தமே ஓ.ஐ.சி தலைமையிலான பொலிஸ் குழு அங்கு சென்றிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating