பொலிஸாருக்கு பொய் சொல்லி மாட்டிக்கொண்ட சகோதரர்களின் நிலை…!!

Read Time:1 Minute, 55 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-1பொய்யான தகவல்களை முன்வைத்து பொலிஸாரை தவறாக வழிநடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஹம்பாந்தோட்டை பதகிரிய பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் மற்றும் ஏனைய சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று ஹம்பாந்தோட்டை நீதவான் மஞ்சுள கருணாரத்ன முன்னிலையில் இவர்களை ஆஜர்ப்படுத்திய போதே எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸாரினால் அண்மையில் கைது செய்யப்பட்ட இளைஞன் இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

காணாமல் போன இளைஞர் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸாரிடம் பொய்யான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் அவரது சகோதரி மற்றும் மூத்த சகோதரர் ஆகியோர் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து நேற்றிரவு மேலும் ஒரு சகோதரர் கைது செய்யப்பட்டார். இவர்கள் அனைவரும் இன்று ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜே.கே.ரித்தீஷ் தயாரிக்கும் தப்பாட்டம்…!!
Next post யமனாக மாறிய விளாம்பழம் : யானை தாக்கி பெண் பலி…!!