எங்களுக்குள் எந்த பிரிவும் இல்லை:விஜய் யேசுதாஸ் மனைவி…!!
பாடகரும், நடிகருமான விஜய் யேசுதாஸ் துபாயை சேர்ந்த தர்ஷனாவை 5 வருடங்கள் தீவிரமாக காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு அம்னேயா, அவ்யன் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
விஜய் யேசுதாஸ் மலையாள படமொன்றில் பாடகராகவும், தமிழில் ‘மாரி’ படத்தில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். சமீபத்தில் விஜய் யேசுதாஸ்-தர்ஷனா இருவரும் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என்றும், இருவரையும் சேர்த்து வைக்க சமாதான முயற்சிகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் விஜய் யேசுதாஸ் மனைவி தர்ஷனா இந்த விவாகாரத்து செய்தியை மறுத்திருக்கிறார். இது பற்றி கூறியுள்ள அவர் “நானும், விஜய்யும் விவாகரத்து செய்யப்போவதாக வந்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. பிரிவும் இல்லை. நாங்கள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகிறோம். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று தெரிவித்து இருக்கிறார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating