யாழ். இளைஞன் பொலிஸாரால் கைது: 3 மாதம் சிறைத்தண்டனை…!!
யாழில் கஞ்சா பொதியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குருநகர் பகுதி இளைஞனுக்கு மூன்று மாத கால சிறைத்தண்டனையை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த இளைஞன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் குருநகர் பகுதியில் 300 கிராம் கஞ்சா பொதியுடன் யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வந்திருந்த வேளை இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது குறித்த இளைஞனுக்கு மூன்று மாத கால சிறைத்தண்டனை வழங்கி யாழ் நீதிவான் நீதிமன்ற நீதிபதி சதிஸ்குமார் தீர்ப்பளித்துள்ளார்.
தற்போதும் யாழ் குருநகர் பகுதியில் வீதிகளில் நிற்பவர்கள் மற்றும் மது அருந்துபவர்கள் பொலிஸாரால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating