பிரபல நடிகை உட்பட ஆபாச படத்தை தயாரித்து வெளியிட்டவர்கள் கைது…!!
இலங்கையின் பிரபல நடிகை மற்றும் இரண்டு தொலைக்காட்சி நடிகர்களை கொண்டு ஆபாச படம் ஒன்றை தயாரித்து தன் குறுந்தடுகளை விற்பனைக்கு வெளியிட்ட குற்றச்சாட்டில் நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெயாங்கொடை பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர்.
ஆபாச படத்தில் நடித்த நடிகை, இரண்டு நடிகர்கள் மற்றும் படத்தின் இயக்குனர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொலைக்காட்சி நாடகம் ஒன்றை படமாக்குவதாக கூறி, குரிகொட்டுவ என்ற பிரதேசத்தில் வீடொன்றை வாடகைக்கு எடுத்து, அந்த வீட்டில் உள்ள அறை ஒன்றில் இந்த ஆபாச படத்தை படமாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த ஆபாசப் படத்தின் 6 ஆயிரம் பிரதிகள் விற்பனைக்காக வெளியிடப்பட்டுள்ளதுடன், ஒரு பிரதி இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து வெயங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating