குழந்தை மற்றும் பெண் உள்ளே இருந்த நிலையில் திடீர் என தீப்பிடித்த முச்சக்கரவண்டி…!!
Read Time:1 Minute, 8 Second
பம்பலப்பிடிய பிரதேசத்தில் முச்சக்கரவண்டியொன்றில் தீடீர் என தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக குறித்த வாகனம் முற்றாக தீக்கிரையாகியுள்ளது.
முச்சக்கரவண்டியில் தீப்பரவல் ஏற்படும் போது அதனுள் குழந்தையொன்றும் மற்றும் பெண்ணொருவரும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் எந்தவித ஆபத்து ஏற்படும் முன் விரைவாக செயற்பட்ட அவர்கள் முச்சக்கரவண்டியில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் , தீயினை அணைப்பதற்கு அருகில் இருந்தவர்கள் முயற்சி செய்த போதும் அது முடியாமல் போயுள்ளது.
தீப்பரவலுக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating