மாயமான இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை…!!

Read Time:6 Minute, 8 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70கடந்த 14ம் திகதி மாயமான பட்டதாரி இளம்பெண், லாட்ஜில் பிணமாக கிடந்தது சென்னை மயிலாப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக, பேஸ்புக் காதலன் மற்றும் அவரது நண்பரை பொலிசார் தேடி வருகின்றனர்.

மயிலாப்பூர் வி.பி. கோயில் தெருவை சேர்ந்தவர் எத்திராஜ். அப்பகுதியில் பழைய பேப்பர் கடை வைத்துள்ளார். இவருக்கு இரண்டு மகள்கள். இளைய மகள் நிவேதிதா (22), கடந்த ஆண்டு எம்.பி.ஏ படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்தார்.

படிக்கும்போது நிவேதிதா ஒருவரை காதலித்து வந்ததாகவும், பல இடங்களில் இருவரும் சுற்றியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 14ம் திகதி காலைபெற்றோரிடம் தோழியை பார்த்து விட்டு வருவதாக கூறி வெளியே சென்ற நிவேதிதா மாலை வரை வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், நிவேதிதா உடன் படித்த தோழிகள், உறவினர்கள் வீடுகளில் விசாரித்தனர். ஆனால், அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கடந்த 14ம் திகதி இரவு தந்தை எத்திராஜ் புகார் கொடுத்தார். பொலிசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மயிலாப்பூர் லஸ் கார்னர் அருகே உள்ள ஒரு லாட்ஜில் உள்ள 210 எண் கொண்ட அறை கதவு வெகு நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைத்த லாட்ஜ் நிர்வாகிகள் மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக, பொலிசார் லாட்ஜுக்கு சென்று அறையை திறந்து பார்த்தனர். அப்போது உள்ளே 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அவரது கழுத்து மற்றும் உடலில் பல இடங்களில் சிறுசிறு காயங்கள் இருந்தன. கொலை செய்யப்பட்டு கிடந்த பெண் குறித்து, பொலிசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், கடந்த 14ம் திகதி மாயமான நிவேதிதா படத்துடன் ஒப்பிட்டு பார்த்தபோது கொலை செய்யப்பட்டு கிடந்தது நிவேதிதா என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பொலிசார் கூறியதாவது, முதற்கட்ட விசாரணையில், நிவேதிதா செல்போன் மற்றும் பேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்தபோது, பேஸ்புக்கில் நண்பராக பழகிய ஒருவர், நிவேதிதாவுடன் செல்போனில் அதிக நேரம் பேசியது தெரியவந்தது.

நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், பேஸ்புக் காதலன் தனது நண்பருடன் நிவேதிதாவை பார்க்க மயிலாப்பூர் வந்துள்ளார்.

அப்போது, அவர்களை தங்க வைப்பதற்காக நிவேதிதா லாட்ஜில் ரூம் புக் செய்துள்ளார். அதன்படி, கடந்த 14ம் திகதி லாட்ஜில் நிவேதிதா தனது காதலன் மற்றும் அவரது நண்பருடன் லாட்ஜுக்கு வந்து பதிவேட்டில் கையெழுத்திட்டுள்ளார்.

அறையில், நிவேதிதாவுடன் காதலன் வலுக்கட்டாயமாக உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர், தன்னுடன் வந்த நண்பருடன் உல்லாசமாக இருக்க கட்டாயப்படுத்தியபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இது, வெளியே தெரிந்தால் பிரச்னை ஆகி விடும் என்று எண்ணிய காதலன் மற்றும் அவரது நண்பர் இருவரும் சேர்ந்து நிவேதிதாவை கழுத்தை நெரித்து படுகொலை செய்துள்ளனர்.

அறையில், நிவேதிதா அரை நிர்வாணமாக, கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். முதுகு பகுதியில் நகக் கீறல்கள் உள்ளன.

லாட்ஜ் அறையில் இருந்து முக்கிய தடயங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன. நிவேதிதாவுடன் வந்த காதலன், அவரது நண்பர் யார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.

இருவரையும் விரைவில் பிடித்து விடுவோம். நிவேதிதா கல்லூரியில் படிக்கும் போது மயிலாப்பூர் அம்பேத்கர் பால பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த வாலிபர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடலில் குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

அதன் பிறகுதான் பேஸ்புக் மூலம் மற்றொரு வாலிபரை நிவேதிதா காதலித்து வந்ததும் தெரியவந்தது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வயிற்று புண் பற்றிய சில உண்மைகள் – படியுங்கள் பகிருங்கள்…!!
Next post ஆடை ஏதும் இன்றி விமான நிலையம் வந்த நபரால் பரபரப்பு: வியக்க வைக்கும் காரணம்…!!