வயிற்று புண் பற்றிய சில உண்மைகள் – படியுங்கள் பகிருங்கள்…!!
நொறுங்கத் திண்ணவனுக்கு நூறு வயது’ என்பார்கள். ஆனால் இன்றைய வாழ்க்கையில் யார் அமைதியாக உட்கார்ந்து மென்று சாப்பிடுகிறார்கள். யாரும் சரியான நேரத்தில் உணவு உண்பதில்லை. குடல்புண் உள்ளவர்களுக்கு மேல்வயிற்றில் வலி, குமட்டல், வாந்தி, வாயில் புளிப்பு நீர் ஊறல், நெஞ்சு எரிச்சல் ஆகியவை ஏற்படும். இது பற்றி சற்று விரிவாக ஆராய்வோம்…
இரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்
1) எளிதில் ஜீரணமாகாத உணவுப் பொருட்களை அளவிற்கு அதிகமாக உண்பது.
2) பட்டினி கிடப்பது.
3) குறிப்பிட்ட நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் நேரம் தவறி சாப்பிடுவது.
4) மிகச் சூடான பானங்களை அருந்துவது.
5) சூடான உணவுப் பொருட்களை உண்பது.
6) காரமான மற்றும் அதிக மசாலா கலந்த உணவுகளை உண்பது
7) சத்தான உணவு வகைகளை அதிகமாக உணவில் சேர்க்காதது.
8) மது அருந்துதல், புகை பிடித்தல், புகையிலை முதலியவைகளை அளவிற்கு அதிகமாக பயன்படுத்துதல்
9) கல், மண், தூசி மற்றும் கலப்படங்கள் கலந்த அசுத்தமான உணவுகளை உண்பது.
10) சில வகை மருந்துகளை வெகுகாலமாக மருத்துவரின் ஆலோசனையின்றி உண்பது மேலும் அதிக கவலை, மன அழுத்தம், கோபம் கொள்வது போன்றவைகளிலும் வயிற்றுப்புண் ஏற்படுகிறது.
வயிற்று புண்னை தவிர்த்துக் கொள்ள கடைப்பிடிக்க வேண்டிய உணவு பழக்கவழக்கங்கள்
1. காபி, டீ, அருந்துவதை குறைத்தல்
2. மது அருந்துதல், புகை பிடித்தலை நிறுத்தல்
3. நேரம் தவறாமல் குறிப்பிட்ட நேரத்தில் உண்ணல்.
4. உணவில் அதிகம் காரம் சேர்ப்பதை தவிர்த்தல்
5. குறுகிய இடைவெளியில் அடிக்கடி மோர், இளநீர் ஏதாவது அருந்துதல்
6. உணவில் மணத்தக்காளிக் கீரை, அகத்திக் கீரை ஆகியவைகளை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
7. காய்கறிகளில் எளிதில் செரிக்கும் கத்தரிப்பிஞ்சு வெண்டைப்பிஞ்சு, வாழைப்பூ, வாழைத்தண்டு, புடலம் பிஞ்சு ஆகியவைகளை கூட்டு செய்து சாப்பிடலாம்.
8. எளிதில் செரிக்கும் வாழைப்பழம், ஆப்பிள் சாறு போன்ற பழங்களை எடுத்துக்கொள்ளல்.
இவற்றை கடைபிடியுங்கள். நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் என்பதை உணர்வீர்கள்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
Average Rating