2 மகள்களுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை…!!

Read Time:2 Minute, 18 Second

201612201353558602_young-woman-suicide-with-2-daughters_secvpfபள்ளிகொண்டா அருகே உள்ள ராமபுரத்தை சேர்ந்தவர் ஜீவக்குமார். தனியார் கம்பெனி ஊழியர். இவருக்கும் காஞ்சீபுரத்தை சேர்ந்த திவ்யாஸ்ரீ (வயது 25) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களது மகள்கள் தேவிஸ்ரீ (6), கவினா (2½). ஜீவக்குமாருக்கும், திவ்யாஸ்ரீக்கும் இடையே குடும்ப தகராறு இருந்த வந்தது. நேற்றும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

பின்னர் மாலையில் இருந்து திவ்யாஸ்ரீயும், 2 மகள்களும் மாயமானார்கள். அவர்களை உறவினர்கள் மற்றும் பல இடங்களில் ஜீவக்குமார் தேடினார். ஆனால் அவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரது விவசாய கிணற்றில் 2 குழந்தைகள் மற்றும் ஒரு பெண்ணின் பிணம் மிதப்பதாக தகவல் கிடைத்தது.

ஜீவக்குமார் அங்கு சென்று பார்த்தார். அப்போது கிணற்றில் பிணமாக கிடந்தது திவ்யாஸ்ரீ, தேவிஸ்ரீ, கவினா என்பது தெரியவந்தது. அவர்கள் உடலை பார்த்து ஜீவக்குமார் கதறி துடித்ததை பார்க்க பரிதாபமாக இருந்தது.

தகவல் கிடைத்தும் பள்ளி கொண்டா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 3 பேரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் விரக்தி அடைந்த திவ்யாஸ்ரீ தனது 2 மகள்களுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓசூர் அருகே விபத்து: அரசு பஸ் டிரைவர்- கண்டக்டர் பலி…!!
Next post லாட்ஜில் பெண்களை ஆபாசமாக படம் பிடித்து ‘வாட்ஸ்-அப்’பில் பரப்பியவர் கைது…!!