இந்தோனேஷிய விமானம் மாயம்
Read Time:1 Minute, 8 Second
இந்தோனேஷிய விமான படைக்கு சொந்தமான விமானம் ஒன்று மாயமாகி விட்டதாக அந்நாட்டு ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அந்த விமானத்தில் இந்தியா மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த 13 பயணிகளும், 5 விமான குழுவினரும் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். காணாமல் போன இந்த விமானத்தை சலக் மலைப்பகுதியில் தேடும் பணி நடைபெற்று வருவதாக இந்தோனேஷிய விமானப் படையின் செய்தித் தொடர்பாளர் சீரூதின் ராய் தெரிவித்துள்ளார். கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அந்த விமானம் நேற்று காணாமல் போனதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தோனேஷியா வில் அடிக்கடி விமான விபத்துக்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Average Rating