ஜயந்த விக்கிரமரத்ன இலங்கை பொலிஸ்மா அதிபராக ஜூலை 2ல் பதவியேற்பார்
Read Time:59 Second
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் புதிய பொலிஸ் மா அதிபராக ஜயந்த விக்கிரமரட்ண எதிர்வரும் ஜூலைமாதம் 2ம்திகதி பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். தற்போதைய பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா எதிர்வரும் 30ம் திகதி ஓய்வு பெறவுள்ளதால் புதிய பொலிஸ் மா அதிபராக ஜயந்த விக்கிரமரட்ண பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றி வரும் ஜயந்த விக்கிரமரட்ண தற்போது சிரேஷ்ட பொலிஸ் மா அதிபராக செயற்பட்டு வருகிறார். மேலும் இவர் சிறீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பழைய மாணவராவார் என தெரிவிக்கப்படுகிறது.
Average Rating