சிறுமியிடம் சில்மிஷம் : போலீஸ்காரர் சஸ்பெண்ட்!!
Read Time:1 Minute, 5 Second
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் புலனாய்வு தனிப்பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றுபவர் சரவணன் (44). இவர் அங்குள்ள காவலர் குடியிருப்பில் மனைவி, 2 மகன்களுடன் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் வீட்டின் அருகே வசிக்கும் 10 வயது சிறுமியிடம், சரவணன் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் தாய், போலீசில் புகார் அளித்தார். தகவலறிந்த அப்பகுதி பெண்கள், சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர் உடனடியாக வீட்டை காலி செய்யக்கோரி முற்றுகையிட்டனர். இந்த நிலையில், சரவணனை ராமநாதபுரம் எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார். தலைமறைவான சரவணனை போலீசார் தேடி வருகின்றனர்.
Average Rating