விடத்தல்தீவு நோக்கி ஷெல் தாக்குதல்..
Read Time:1 Minute, 21 Second
மன்னாரில் உள்ள படையினரின் ஆட்லறி தலங்களில் இருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான விடத்தல் தீவு பகுதியினை நோக்கி நேற்று வியாழக்கிழமை காலை முதல் தொடர்ச்சியான ஷெல் தாக்குதலினை படையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மன்னார் நகரப்பகுதியில் பாரிய ஷெல் சத்தங்களை கேட்ட வண்ணமே உள்ளனர் இதனால் மன்னார் பகுதியில் மக்களிடையே அச்சநிலை உருவாகியுள்ளது. இதேவேளை நேற்று வியாழக்கிழமை மாலை 3.20 மணியளவில் இலங்கை விமானப்படையினர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியினுள் கிபீர் தாக்குதலினையும் மேற்கொண்டுள்ளனர் ஆனால் சேதவிபரங்கள் அறிந்து கொள்ள முடியவில்லை விடுதலைப்பலிகளின் பகுதிகளை நோக்கி மேற்கொள்ளப்பட்டு வரும் ஷெல் தாக்குதல்கள் தொடர்ந்தும் நடந்து கொண்டிருக்கின்றன என்று மேலும் தெரிவிக்கப்படுகிறது
Average Rating